‘கோவை அருகே அடுத்தடுத்து 3 மாணவிகள் திடீர் மாயம்’ – அதிர்ச்சி தகவல்!

 

‘கோவை அருகே அடுத்தடுத்து 3 மாணவிகள் திடீர் மாயம்’ – அதிர்ச்சி தகவல்!

கோவையில் 3 மாணவிகள் அடுத்தடுத்து காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 15ம் தேதி கோவை, ஆண்டக்கா பாளையத்தை சேர்ந்த கோபிநாத் என்பவரின் மகள் திவ்யதர்ஷினி(17), அருகே உள்ள கடைக்கு சென்றிருக்கிறார். நெடுநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர் கோவில்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

‘கோவை அருகே அடுத்தடுத்து 3 மாணவிகள் திடீர் மாயம்’ – அதிர்ச்சி தகவல்!

இதை தொடர்ந்து கடந்த 17ம் தேதி பிச்சனூர் அண்ணா நகரை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் சத்யபிரியா(16) கோவிலுக்கு செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அவர் வீடு திரும்பாததால் பெற்றோர் உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடியுள்ளனர். இருப்பினும் அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ரம்யா (19) திடீரென மாயமாகி உள்ளார். அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில், அவர் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. கோவையில் அடுத்தடுத்து 3 மாணவிகள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.