மாணவிக்கு செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

 

மாணவிக்கு செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

புதுக்கோட்டையில் பதினோராம் வகுப்பு பள்ளி மாணவிக்கு செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த சண்முகநாதனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மாணவிக்கு செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்

புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் சண்முகநாதன் செல்போனில் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி, தனது பெற்றோரிடம் புகார் அளித்ததையடுத்து, அவர்கள் புதுக்கோட்டை காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து சண்முகநாதனை கைது செய்த போலீசார், அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பரிசோதனைக்காக அழைத்து சென்றனர். அப்போது ஆசிரியர் சண்முகநாதனுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், சிகிச்சை முடிந்த பின்னர் மருத்துவர்களின் சான்று பெற்ற பிறகு ஆசிரியர் சண்முகநாதன் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.