வீடு புகுந்து மாணவி பாலியல் பலாத்காரம்… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

 

வீடு புகுந்து மாணவி பாலியல் பலாத்காரம்… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

சிவகங்கை

சிவகங்கை அருகே வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்தவர் 16 வயது மாணவி. இவர் அங்குள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவிக்கு அருகே உள்ள ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் அருண் பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறி உள்ளது.

வீடு புகுந்து மாணவி பாலியல் பலாத்காரம்… இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

இந்த நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி மாணவி வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த, அருண் பாண்டி மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் மானாமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவர் அருண் பாண்டியை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.