விசாரணைக்கு சென்ற மாணவன் தூக்கில் தொங்கினார் – போலீஸ் கொன்று விட்டதாக புகார்!

 

விசாரணைக்கு சென்ற மாணவன் தூக்கில் தொங்கினார் – போலீஸ் கொன்று விட்டதாக புகார்!

போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞன் சடலமாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசாரணைக்கு சென்ற மாணவன் தூக்கில் தொங்கினார் – போலீஸ் கொன்று விட்டதாக புகார்!

மதுரை பேரையூர் அருகே பொறியியல் மாணவர் ரமேஷ் என்பவரின் அண்ணன், 17 வயதான பெண் ஒருவரை திருமணம் செய்ய அழைத்து சென்றுள்ளார். இதுகுறித்து பெண் வீட்டார் அளித்த புகாரின் அடிப்படையில் அண்ணன் செய்த செயலுக்கு தம்பி ரமேஷை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

விசாரணைக்கு சென்ற மாணவன் தூக்கில் தொங்கினார் – போலீஸ் கொன்று விட்டதாக புகார்!

இந்நிலையில் போலீஸ் விசாரணைக்கு சென்ற இளைஞன் சடலமாக மரத்தில் தூக்கிட்ட நிலையில் இருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணை முடிந்து ரமேஷ் வீட்டுக்கு சென்றுவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறிய நிலையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் கல்லூரி மாணவர் ரமேஷை அடித்து கொன்றதாக உறவினர்கள் புகார் தெரிவித்து அப்பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.