“பணம் கொடுக்கலேன்னா பலாத்காரம் செஞ்சேன்னு சொல்வேன்” -பிளாக் மெயில் செய்த ஆண்ட்டியால் மிரண்ட மாணவர் .

 

“பணம் கொடுக்கலேன்னா பலாத்காரம் செஞ்சேன்னு சொல்வேன்” -பிளாக் மெயில் செய்த ஆண்ட்டியால் மிரண்ட மாணவர் .

ஒரு கல்லூரி மாணவரிடம் உறவு கொண்டு விட்டு, பின்னர் பணம் கேட்டு ப்ளாக் மெயில் செய்த பெண்ணால் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

புனேவின் கோயாலி கிராமமான கெத் தெஹ்ஸைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவர் ஆகாஷ் .இவர் தன்னுடைய பக்கத்து வீட்டில் வசிக்கும் 35 வயதான சங்கீதா என்ற ஆண்ட்டியோடு ஊடகம் மூலம் நட்பு கொண்டார் .அதன் மூலம் இருவரும் பல மாதங்களாக பேசி வந்தார்கள் .பின்னர் இவர்களின் நட்பு உடலுறவில் முடிந்தது .

பக்கத்து பக்கத்து வீடு என்பதால் இருவரும் பலமுறை உறவில் ஈடுபட்டார்கள் .அதன் பிறகு அந்த பெண் சங்கீதாவுக்கு பணம் தேவைப்பட்டது .அதனால் அந்த கல்லூரி மாணவர் ஆகாஷிடம் பணம் கேட்டார் .ஆனால் அதற்கு ஆகாஷ்  தன்னிடம் பணமில்லை என்று கூறிவிட்டார் .ஆனால் அதை கேட்டு அந்த பெண்  நம்பாமல் அவரிடம் மீண்டும்  மீண்டும் பணம் கேட்டார் .அதனால் மீண்டும் அவர் சங்கீதாவிடம் பணமில்லை என்று கூறி உறவினை கட் பண்ணி கொண்டார் .ஆனால் அவரை விடாத சங்கீதா மீண்டும்  அவருக்கு போன் செய்து பணம் தரவில்லையென்றால் தன்னை பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் கூறி , சிக்க வைத்து விடுவேன் என்று மிரட்டினார் . மேலும் அவர்கள் ஊடகம் மூலம்  அரட்டையடித்ததற்கான ஆதாரங்களை அனுப்பினார் .அதை பார்த்து பயந்து போன ஆகாஷ் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் .அதன் பிறகு அவரின் சகோதரி போலீசில் தனது தம்பியின் சாவுக்கு காரணம் பக்கத்து வீட்டு சங்கீதாதான்  என்று புகார் கூறினார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் .

“பணம் கொடுக்கலேன்னா பலாத்காரம் செஞ்சேன்னு சொல்வேன்” -பிளாக் மெயில் செய்த ஆண்ட்டியால் மிரண்ட மாணவர் .