‘பந்து மார்பில் பட்டு உயிரிழந்த மாணவன்’: கிரிக்கெட் விளையாடிய போது நேர்ந்த சோகம்!

 

‘பந்து மார்பில் பட்டு உயிரிழந்த மாணவன்’: கிரிக்கெட் விளையாடிய போது நேர்ந்த சோகம்!

திருவள்ளூர் அருகே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது பந்து பட்டு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே புன்னப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த இளைஞர் லோகநாதன்(24). இவர் ஆந்திராவில் இருக்கும் சட்டக் கல்லூரில் படித்து வந்த நிலையில், நேற்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றிருக்கிறார். அப்போது, வேறு ஒருவர் அடித்த பந்தை லோகநாதன் பிடிக்க முயன்றிருக்கிறார். பந்து அவரது மார்பில் பட்டதால், அங்கேயே லோகநாதன் மயங்கி விழுந்திருக்கிறார். அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் உடனே, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

‘பந்து மார்பில் பட்டு உயிரிழந்த மாணவன்’: கிரிக்கெட் விளையாடிய போது நேர்ந்த சோகம்!

அங்கு லோகநாதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் லோகநாதனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில், நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஆகியுள்ளது. அதனால் லோகநாதனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், உடனே பிரேத செய்ய உத்தரவிடுவதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் விளையாடிய போது மாணவன் உயிரிழந்த இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.