மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு: வீட்டில் ஸ்விட்ச் போடும் போது நேர்ந்த சோகம்!

 

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு: வீட்டில் ஸ்விட்ச் போடும் போது நேர்ந்த சோகம்!

பள்ளிக்கரணை அருகே மின்சாரம் தாக்கி 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு: வீட்டில் ஸ்விட்ச் போடும் போது நேர்ந்த சோகம்!

சென்னை பள்ளிக்கரணை அருகே இருக்கும் சாய் பாலாஜி நகரில் வசித்து வந்த மாணவன் வெங்கடேஷ், 8ம் வகுப்பு படித்து வந்தார். அவர் நேற்று வீட்டில் ஸ்விட்ச் போட முயன்றுள்ளார். ஏற்கனவே ஸ்விட்ச் போர்டில் மின்கசிவு ஏற்பட்டிருந்ததை அறியாத வெங்கடேஷ், கையால் ஸ்விட்ச் போட்டவுடன் மின்சாரம் தாக்கி அங்கிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். சிறுவனின் அலறல் சத்தத்தைக் கேட்டு வந்த பெற்றோர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்பு: வீட்டில் ஸ்விட்ச் போடும் போது நேர்ந்த சோகம்!

மருத்துவமனையில் வெங்கடேஷை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புரெவி புயலால் கனமழை பெய்து வந்த நிலையில், பல இடங்களில் மின்சாரம் தாக்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும், காஞ்சிபுரம் அருகே மின்கம்பியை சரி செய்ய சென்ற 2 மின்வாரிய ஊழியர்களும், இளையான்குடி அருகே ஒரு வாலிபரும், சென்னையில் 2 மின்வாரிய ஊழியர்களும், தேனியில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.