படிக்க பயந்து மாணவன் தூக்கிட்டு தற்கொலை; அவிநாசி அருகே பரபரப்பு!

 

படிக்க பயந்து மாணவன் தூக்கிட்டு தற்கொலை; அவிநாசி அருகே பரபரப்பு!

அவிநாசியில் படிப்புக்கு பயந்து 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பி.எஸ்.சுந்தர வீதியில் வசித்து வரும் தம்பதி செந்தில்நாதன் (43)- பிரதீபா (34) , இவர்களுக்கு 3 மகன்கள் இருந்தனர். மூத்த மகன் சஞ்சய்(15) நாதம்பாளையம் பகுதியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். படிப்பில் கெட்டிக்காரத்தனம் இல்லாத சஞ்சய் கடந்த சில நாட்களாக ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தாததால், பிரதீபா சஞ்சய்யை திட்டியிருக்கிறார்.

படிக்க பயந்து மாணவன் தூக்கிட்டு தற்கொலை; அவிநாசி அருகே பரபரப்பு!

இதுமட்டுமில்லாமல் அக்.1 முதல் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்திருப்பதால் இன்னும் சில நாட்களில் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்றும் வீட்டு பாடங்கள் அதிகமாக இருக்கும் என்றும் எண்ணிய சஞ்சய் மன உளைச்சலில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் இன்று காலை சஞ்சய்யின் தந்தை வழக்கம் போல வேலைக்கு செல்ல, தாயாரும் ரேஷன் கடைக்கு சென்ற நேரத்தில் சஞ்சய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

வீடு திரும்பியதும் சஞ்சய் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பிரதீபா, அக்கம் பக்கத்தினரை கதறியவாறு அழைத்திருக்கிறார். தகவல் அறிந்து வந்த போலீசார் சஞ்சய்யின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.