நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை!

 

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை!

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் நிகழ்ந்துள்ளது.

மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வானது நாளை மதியம் 2 மணிக்கு நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை!

இந்நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் மகள் ஜோதி துர்கா நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த இவர் இந்தாண்டு நீட் தேர்விற்கு தயாராகி வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வுக்கு சிறப்பாக தயாராகிவந்த மாணவி தேர்வில் ஒருவேளை தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்து கொள்வதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பதைபதைக்க செய்துள்ளது.

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை!

கடந்த 9 ஆம் தேதி முன்பு நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்த அரியலூர் எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.