`சகோதரியுடன் சண்டை; 12வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை!’ பதறிப்போன அப்பார்ட்மெண்ட் வாசிகள்

 

`சகோதரியுடன் சண்டை; 12வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை!’ பதறிப்போன அப்பார்ட்மெண்ட் வாசிகள்

சகோதரியுடன் ஏற்பட்ட தகராறில் 10ம் வகுப்பு மாணவி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 12 மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை புரசைவாக்கம் பிரிக்லின் ரோடு பகுதியில் 13 மாடிகள் கொண்ட அப்பார்ட்மெண்ட்டில் 12-வது மாடியில் அமித் என்பவர் தனது தம்பி குடும்பத்துடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். அமித்தின் மகள் ரூகி (15). இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துள்ளார் ரூகி. நேற்று முன்தினம் மாலை ரூகி வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது மின் விசிறி வேகமாக ஓடியுள்ளது. அந்த நேரத்தில் ரூகியின் சகோதரி மின்விசிறியின் வேகத்தைக் குறைத்துள்ளார். இதனால் சகோதரிகள் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது, வீட்டில் உள்ளவர்கள் இருவரையும் கண்டித்துள்ளதோடு, சமரசப்படுத்தியுள்ளனர். இதனிடையே, தன்னை வீட்டில் உள்ளவர்கள் திட்டியதால் வேதனை அடைந்துள்ளார் ரூகி. பின்னர் திடீரென 12-வது மாடியிலிருந்து கீழே குதித்துவிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் மாடிக்கு வந்து பார்த்துள்ளனர். தரையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரூகியை பார்த்து அதிர்ச்சியடைந்ததோடு, மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். உடனடியாக உறவினர்கள் ரூகியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ரூகி இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து தகவலறிந்த தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனனக்கு அனுப்பி வைத்தனர்.

`சகோதரியுடன் சண்டை; 12வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை!’ பதறிப்போன அப்பார்ட்மெண்ட் வாசிகள்
மாதிரி படம்

`வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த ரூகிக்கும் அவரின் சித்தி மகளுக்கும் மின்விசிறியால் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மனவேதனையில் மாடியில் இருந்து குதித்து ரூகி தற்கொலை செய்து கொண்டுள்ளார்” என்றனர் காவல்துறையினர்.

சகோதரியுடன் ஏற்பட்ட மின்விசிறி தகராறில் 10ம் வகுப்பு மாணவி 12வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னை அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.