செல்போன் பயன்படுத்தாதே… என தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை

 

செல்போன் பயன்படுத்தாதே… என தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை

கோவையில் செல்போன் பார்க்கக்கூடாது என தந்தை திட்டியதால் கல்லூரி மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்போன் பயன்படுத்தாதே… என தந்தை திட்டியதால் மாணவி தற்கொலை

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனியார் கல்லூரியில் நூலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கல்பனா(22). இவர் சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் அக்கவுண்ட்ஸ் படித்து முடித்துள்ளார். படிப்பை முடித்தவுடன் ஒரு வருட காலமாக வீட்டிலேயே இருந்துள்ளார். இவரது தந்தை அவ்வப்பொழுது கல்பனாவை செல்போன் பயன்படுத்தக்கூடாது, யாருடனும் சாட்டிங் செய்யக்கூடாது என பலமுறை எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

இதையடுத்து கல்பனா நான்கு நாட்களாக தந்தையுடன் பேசாமல் இருந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உறவினர் வீட்டுக்குச் சென்று உள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த கல்பனா, பூச்செடிகளுக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துள்ளார். மூன்று மணி நேரம் கழித்து வந்த அவரது தந்தை ரவிச்சந்திரன் உடனடியாக கணபதி பகுதியில் உள்ள விஜயராகவன் மருத்துவமனைக்கு கல்பனாவை அழைத்து சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்பனா நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.