நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவன் கைது!

 

நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவன் கைது!

நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய கல்லூரி மாணவன் அடையாறு சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவன் கைது!

நடிகை சனம் ஷெட்டி பிக் பாஸ் சீசன் 4இல் கலந்து கொண்டு பிரபலமானவர். தமிழ், தெலுங்கு ,இந்தி ,மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துள்ள இவர் மாடலிங் , விளம்பரம் என பிஸியாக உள்ளார்.அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். .

இந்த சூழலில் நடிகை சனம் செட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை அடையாறு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனக்கு வந்த ஆபாச மெசேஜ் அடங்கிய ஆதாரங்களை இணைத்த அவர் , தனக்கு தினமும் ஆபாச மெசேஜ் அனுப்பி ஒரு நபர் தொல்லை செய்வதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். நடிகை சனம் செட்டி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய மாணவன் கைது!

இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை சனம் ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பிய திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பால் என்ற மாணவனை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கையை தொடர்ந்து மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.