“விழுப்புரத்தில் பிப்.6ல் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்” – நல்லசாமி அறிவிப்பு

 

“விழுப்புரத்தில் பிப்.6ல் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்” – நல்லசாமி அறிவிப்பு

ஈரோடு

விழுப்புரத்தில் வரும் 6ஆம் தேதி கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு கள் இயக்க சங்க தலைவர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நல்லசாமி, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் உள்ளதாகவும், மற்ற மாநிலங்களில் கள் விற்பனை நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் மட்டும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

“விழுப்புரத்தில் பிப்.6ல் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம்” – நல்லசாமி அறிவிப்பு

மேலும், தமிழகத்தில் கள் இறக்க அனுமதி வழங்க வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் 13 ஆம் தேதி ஈரோட்டில் கள் விடுதலை மாநாடு நடைபெறும் என்றும் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இந்த மாநாடு, ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இதன் முன்னோட்டமாக வரும் 6ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நரசிங்கநூரில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் அறப்போராட்டம் நடைபெறும் எனவும் நல்லசாமி தெரிவித்தார்.