ஆபாச பேட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை : காவல் ஆணையர் எச்சரிக்கை!

 

ஆபாச பேட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை : காவல் ஆணையர் எச்சரிக்கை!

யூ டியூப் சேனல்கள் ஆபாசமாக பேட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை டாக்ஸ் என்ற யூ டியூப் சேனல், சென்னை பெசன்ட் நகரில் ஒரு இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசி, வீடியோ எடுத்து வெளியிட்டது சர்ச்சையை கிளப்பியது. அந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் கண்டனக் குரல் எழுப்பினர். இது குறித்து பெசன்ட் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், சென்னை டாக்ஸ் சேனலின் தொகுப்பாளர், கேமரா மேன் மற்றும் உரிமையாளர் ஆகிய 3 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஆபாச பேட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை : காவல் ஆணையர் எச்சரிக்கை!

ஆபாசமாக பேட்டி கொடுத்த அந்த பெண் பணம் கொடுத்து அவ்வாறு பேசச் சொன்னதாக வேறொரு, யூ டியூப் சேனலிடம் தெரிவித்திருக்கிறார். அதனடிப்படையில், அந்த பெண்ணிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பார்வையாளர்களை அதிகரிக்கச் செய்ய யூ டியூப் சேனல்கள், இது போன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

ஆபாச பேட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை : காவல் ஆணையர் எச்சரிக்கை!

இந்த நிலையில், யூ டியூபில் ஆபாசமாக அருவருக்கத்தக்க வகையில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தால் அதனை உடனே நீக்குமாறு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ஆபாச பேட்டிகளை எடுத்து அதனை ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் யூ டியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.