பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை : ஓபிஎஸ் உறுதி!

 

பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை : ஓபிஎஸ் உறுதி!

பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதியளித்துள்ளார்.

பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை : ஓபிஎஸ் உறுதி!

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூர் ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு காவி பெயிண்ட் ஊற்றி அவமதிப்பு செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

பெரியார் சிலை அவமதிப்பில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை : ஓபிஎஸ் உறுதி!

இந்நிலையில் இதுகுறித்து துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “சமூகநீதிக்காக பாடுபட்ட பகுத்தறிவு பகலவர் தந்தை பெரியாரின் சிலையை திருச்சியில் மர்மநபர்கள் அவமரியாதை செய்திருக்கும் செயலுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இக்குற்றச் செயலில் ஈடுபட்ட சமுக விரோதிகள் மீது மாண்புமிகு அம்மாவின் அரசு சட்டப்படி கடும்நடவடிக்கை எடுக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பெரியார் சிலை அவமதிப்பிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், வைகோ, கனிமொழி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.