“நாய் ஒன்று புலியானது” -எப்படின்னு கேக்கறீங்களா ?படத்தை பாருங்க…

 

“நாய் ஒன்று புலியானது” -எப்படின்னு கேக்கறீங்களா ?படத்தை பாருங்க…

ஒரு நாய் நம்மூர் ஹோட்டலில் ஆடு போல மாறுவது போல, சமூக ஊடகத்தில் சமீபத்தில் ஒரு நாய் புலியாக மாறிய படம் வைரலாகி பரவிவருகிறது .இதை பார்த்த பல நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளி குவிக்கிறார்கள் .

“நாய் ஒன்று புலியானது” -எப்படின்னு கேக்கறீங்களா ?படத்தை பாருங்க…

மலேசியாவில் உள்ள யாரோ ஓர் நெட்டிசன் சமூக ஊடகத்தில் தான் வீட்டில் வளர்த்த நாய்க்கு புலிபோல பெயிண்ட் அடித்து அசல் புலிபோலவே மாற்றி அந்த படத்தை சமூக ஊடகத்தில் பரவ விட்டுள்ளார் .இந்த படத்துக்கு 6000க்கு மேற்பட்ட லைக்குகளும் ,3000கும் மேற்பட்ட ஷேர்களும் குவிகின்றன .
இந்த புலியாக மாற்றப்பட்ட நாய் படத்தினை பார்த்த மலேசியாவின் விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் இப்படி நாயை கொடுமை படுத்தி அதன் உடலில் பெயிண்ட் அடித்து சித்திரவதை செய்துள்ளதை கண்டித்து இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது .மேலும் இதை செய்த நபரை அவர்கள் வலை வீசி தேடி வருகிறார்கள் .அந்த நபரை பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனே மலேசிய விலங்கு நல வாரியத்தை தொடர்புகொள்ள கேட்டுக்கொண்டுள்ளனர் .
மேலும் இதே போல் கர்நாடகாவில் ஒரு நபர் தன்னுடைய வயலில் அட்டகாசம் செய்யும் குரங்குகளை மிரட்ட தன் வீட்டு நாய்க்கு புலி போல பெயிண்ட் அடித்து குரங்குகளை விரட்டியுள்ளார் .அப்படி கூட குரங்குகளை மிரட்ட யாரோ ஒருவர் இப்படி செய்திருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறினார்கள் .

“நாய் ஒன்று புலியானது” -எப்படின்னு கேக்கறீங்களா ?படத்தை பாருங்க…