தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த தெருநாய் அடித்துக்கொலை… ஊழியர்கள் மீது போலீசில் புகார்…

 

தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த தெருநாய் அடித்துக்கொலை… ஊழியர்கள் மீது போலீசில் புகார்…

சென்னை

மாங்காடு அருகே தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த தெருநாயை, ஊழியர்கள் அடித்துக்கொன்ற சம்வம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாத்தைச் சேர்ந்தவர் சத்தியராஜ்(30). இவர் அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு நாள்தோறும் உணவு வைப்பது வழக்கம். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமும் உணவு சாப்பிட வரும் நாய் ஒன்று மாயமானதால், அதனை தேடி பார்த்துள்ளார். அப்போது, அங்குள்ள தனியார் நிறுவனத்தின் உள்ளே நாய் பலமாக தாக்கப்பட்டு, 2 முன் கால்கள் உடைந்த நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, நிறுவனத்திற்குள் நாய் புகுந்ததால் அங்கு பணிபுரியும் ராஜேஷ், கீர்த்தி மற்றும் ரஞ்சித் ஆகியோர் சேர்ந்து இரும்பு ராடால் நாயை தாக்கியது தெரியவந்தது.

தனியார் நிறுவனத்திற்குள் புகுந்த தெருநாய் அடித்துக்கொலை… ஊழியர்கள் மீது போலீசில் புகார்…

மேலும், இதுகுறித்து கேட்ட சத்தியராஜையும் அவர்கள் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனிடையே, படுகாயமடைந்த நாயை, மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, நாயை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி சத்யராஜ் மாங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், புதைக்கப்பட்டுள்ள நாயை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளளனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் நாயை தாக்கியவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தெரிவித்துள்ளனர்.