பிறந்த குழந்தையின் உடலை நாய்கள் சாப்பிடும் அவலம் அகமதாபாத்தில் !

 

பிறந்த குழந்தையின் உடலை நாய்கள் சாப்பிடும் அவலம் அகமதாபாத்தில் !

குஜராத் மாநிலம் அகமதாபாத் வாஸ்னாவில் உள்ள சொரைநகர் நகரில் தன்னுடைய வீட்டிற்கு அருகே புதிதாக பிறந்த குழந்தையின் உடலை நாய்கள் சாப்பிடுவதை கண்ட 50 வயது பெண் ஒருவர் போலீசுக்கு தகவல் அளித்தார்.
கடந்த புதன்கிழமையன்று வாஸ்னாவில் உள்ள சொரைநகர் நகரில் வசிக்கும் பெண்மணி நானி டான்டானியா திடீரென துர்நாற்றம் வீசுவதை உணர்ந்தார். பின்னர் வீட்டிற்கு வெளியில் வந்தபோது சில தெரு நாய்கள் எதையோ சாப்பிட்டு கொண்டிருப்பதை கண்டார். அப்போது அங்கு யாரோ வீசிவிட்டு சென்ற பச்சிளம் குழந்தையின் உடலை நாய்கள் சாப்பிடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து போலீசாருக்கு தகவல் அளித்தார். அவரது வீட்டின் அருகே சடலத்தை வீசி சென்றது யார் என வாஸ்னாவில் உள்ள போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

பிறந்த குழந்தையின் உடலை நாய்கள் சாப்பிடும் அவலம் அகமதாபாத்தில் !
குழந்தை முறைதவறிய உறவில் பிறந்திருக்கலாம் என்றும், இதனால் குழந்தையை கொன்று வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த ஜனவரியில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் ஃபருகாபாத் மாவட்டத்தில் ஒரு நாய் ஒரு மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தையை கடித்து குதறி கொன்றதாக கூறப்படுகிறது.
ஆகாஷ் கங்கா மருத்துவமனையில் பிறந்த குழந்தை ஆபரேஷன் தியேட்டரில் வைக்கப்பட்டிருந்தபோது நாய் இழுத்து சென்றதாக தெரிகிறது.
சில நிமிடங்களில், ஊழியர்கள் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து நாய் வெளியே வந்ததை பார்த்து கூச்சலிட்டனர். ஆனால் நாய் குதறிவிட்டு சென்றதால் குழந்தை இறந்துவிட்டது.