குடித்த அண்ணன் -வெடித்த துப்பாக்கி -குடிபோதையில் தம்பிக்கு நேர்ந்த கதி .

 

குடித்த அண்ணன் -வெடித்த துப்பாக்கி -குடிபோதையில் தம்பிக்கு நேர்ந்த கதி .


குடி போதையில் தம்பியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்
சண்டிகரின் பஞ்ச்குலாவில் சண்டிமந்திரில் உள்ள சுனபட்டி கிராமத்தில் வசிக்கும் அஜித் சிங் மற்றும் சத்னம் சிங் இருவரும் சகோதரர்கள் .இருவரும் ஒரு வங்கியில் பாதுகாப்பு ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர் .அவர்களிருவரும் கொரானா கால நெருக்கடியால் வேலை இழந்தனர் .ஆனால் சத்னம் வங்கியில் கொடுத்த துப்பாக்கியை தன் வசம் வைத்திருந்தார் .

குடித்த அண்ணன் -வெடித்த துப்பாக்கி -குடிபோதையில் தம்பிக்கு நேர்ந்த கதி .


இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில்,சத்னம் தன்னுடைய நண்பரோடு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்தார் .அப்போது அந்த வீட்டிலிருந்த அவரின் தம்பி அஜித் சிங் அவரை மது அருந்திவிட்டு வீட்டுக்குள் வரக்கூடாது என்று சத்தம் போட்டார் .அப்போது சத்னம் தான் அப்படித்தான் வருவேன் என்று கூறினார் .அப்போது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையின்போது அந்த சத்னம் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து அவரின் தம்பியை சுட்டு கொன்றார் .பிறகு துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டு ஓடி வந்த அவர்களின் தாயார் ,அருகில் ஒரு வீட்டிலிருந்த தன்னுடைய கணவனை சத்தம் போட்டு அழைத்தார் .பின்னர் அங்கு இறந்து கிடந்த அவரின் மகனை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசுக்கு தகவல் சொன்னார் .போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த அஜித் சிங் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பின்னர் அவரை கொன்ற அவரின் சகோதரர் பேஸ் புக்கில் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டார் .அதனால் போலீசார் அவரை கைது செய்தனர் .