ஐந்தாம் நாளாக பொன்மலையில் தொடர்ந்து மறியல்!

 

ஐந்தாம் நாளாக பொன்மலையில் தொடர்ந்து மறியல்!

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு கடந்த 11.09.2020 அன்று தொடங்கி 18.09.2020 வரை ஒரு வாரம் தொடர் மறியல் நடத்தப்பட்டு வருகின்றது.

அப்போராட்டத்தின் ஐந்தாம் நாளான இன்று (16.09.2020) காலை, திருச்சி பொன்மலை தொடர்வண்டித் துறைத் தொழிற்சாலை முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மு. தமிழ்மணி தலைமை தாங்கினார். த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரெ. இராசு முன்னிலை வகித்துப் பேசினார். மகளிர் ஆயம் துணைத் தலைவர் பே. மேரி பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

ஐந்தாம் நாளாக பொன்மலையில் தொடர்ந்து மறியல்!

மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் அருணா, தமிழர் முன்னணி பொதுச்செயலாளர் இமயம் சரவணன், தமிழ்த்தேசியப் பேரியக்க புளியங்குடி செயலாளர் க. பாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கதிர்நிலவன், ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

போராட்டத்தில், த.தே.பே. பொருளாளர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு க. அருணபாரதி, திருச்சி மாநகரச் செயலாளர் வே.க. இலக்குவன், பொதுக்குழு தோழர்கள் மூ.த. கவித்துவன், மதுரை சிவா, இனியன், மூத்த மூ. கருப்பையா உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

ஐந்தாம் நாளாக பொன்மலையில் தொடர்ந்து மறியல்!

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும், கொரோனா காலத்தில் தென்னகத் தொடர்வண்டித்துறையில் பணி நியமனம் செய்த 3,218 பேரில் வெளி மாநிலத்தவர்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள அனைவரின் தேர்வையும் இரத்துச் செய்ய வேண்டும், அப்பணி இடங்களைத் தேர்வெழுதிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும், மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் மண்ணின் மக்களுக்கான வேலைச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம் அமைத்து உடலுழைப்புப் பணிகள் உட்பட அனைத்துப் பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.