படுக்கையில் பாத்ரூம் போன சிறுவன் -சிறுநீரை பார்த்து சீற்றமடைந்த சித்தப்பா -விளக்குமாரால் அடித்து கொன்றார்…

 

படுக்கையில் பாத்ரூம் போன சிறுவன் -சிறுநீரை பார்த்து சீற்றமடைந்த சித்தப்பா -விளக்குமாரால் அடித்து கொன்றார்…

படுக்கையில் பாத்ரூம் போன ஐந்து வயது சிறுவனை ,அவரின் சித்தப்பாவே அடித்து கொலை செய்த சம்பவத்தால் அந்த குடும்பம் நிலைகுலைந்து போயுள்ளது .

மத்தியபிரதேச மாநிலம் ரத்தலம் பகுதியில் வசிக்கும் ஜாபர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்,இதனால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி நஸ்மாவிடம் சண்டை போடுவார் .மேலும் மனைவியின் நடத்தை மீதும் சந்தேகம் கொண்ட அவர் தினமும் அதை காரணம் காட்டி சண்டை போடுவார் .

படுக்கையில் பாத்ரூம் போன சிறுவன் -சிறுநீரை பார்த்து சீற்றமடைந்த சித்தப்பா -விளக்குமாரால் அடித்து கொன்றார்…

இதற்கிடையே கடந்த புதன் கிழமை இரவில் நன்றாக குடித்துவிட்டு வந்த ஜாபருக்கு அவரின் மனைவி படுக்கையை சரி செய்து தூங்க அனுப்பினார் ,அப்போது அவரின் வீட்டிலிருக்கும் அவரது சகோதரரின் ஐந்து வயது மகன் படுக்கையில் சிறுநீர் போயுள்ளான் ,இதனால் கோபமுற்ற ஜாபர் வீட்டிலிருந்த விளக்குமாரை எடுத்து அந்த ஐந்து வயது சிறுவனை தாக்கியுள்ளார் . பிறகு, அந்த விளக்குமாரை சிறுவனின் தனிப்பட்ட பகுதியில் சொருகி, அந்த சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார் .இதனால் வலி பொறுக்க முடியாமல் அந்த சிறுவன் அங்கேயே இறந்துள்ளான் .அதை பார்த்து பயந்து போன ஜாபர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார் .

படுக்கையில் பாத்ரூம் போன சிறுவன் -சிறுநீரை பார்த்து சீற்றமடைந்த சித்தப்பா -விளக்குமாரால் அடித்து கொன்றார்…

பிறகு அவரின் மனைவி நஸ்மா ஜாபர் மீது போலீசில் புகாரளித்துள்ளார் .அவரின் புகாரை பெற்ற போலீசார் விரைந்து வந்து ஜாபரை கைது செய்து சிறையிலடைத்தனர் .