’கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனிப்பாதை கூடாது’ மத்திய அரசு

 

’கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனிப்பாதை கூடாது’ மத்திய அரசு

கொரோனா நோய்த் தொற்று கடந்த ஐந்து மாதங்களாக இந்தியாவைப் படாத படுத்தி வருகிறது. லாக்டெளன் அறிவித்தும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் ரஷ்யா கொரோனா தடுப்பு மருந்து கண்டறிந்துவிட்டதாக அறிவித்துவிட்டது. பதிவு செய்துவிட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பு மருந்தை விற்கும் முனைப்பிலும் உள்ளது.

’கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனிப்பாதை கூடாது’ மத்திய அரசு
Blood sample tube positive with COVID-19 or novel coronavirus 2019 found in Wuhan, China

எனவே, இந்திய அரசு அதை கையாள்வதற்கான வழிகளைத் திட்டமிடுகிறது. கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழு கூட்டம் முதன்முறையாகக் கூடியது.

தடுப்பூசி மருந்து இருப்பு வைப்பது, தேவைக்கேற்ப கிடைக்கச் செய்வதற்கு டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்குவதற்கான, சிந்தனைகளை உருவாக்கி அமல் செய்வதற்கான நடைமுறைகள் குறித்து இந்தக் குழு விவாதித்தது. கடைசிநிலை வரையில் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதற்கு, தடுப்பூசி வழங்கலை தடமறிதல் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடம் இருந்து  கோவிட்-19 தடுப்பூசி மருந்துகளை வாங்குவது, இந்தத் தடுப்பூசிகளைப் போடுவதில் எந்தப் பகுதி மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது என்ற வழிகாட்டுதல் கொள்கைகளை உருவாக்குதல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

’கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனிப்பாதை கூடாது’ மத்திய அரசு

கோவிட்-19 தடுப்பூசி மருந்து வாங்குவதற்குத் தேவைப்படும் நிதி மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றியும் நிபுணர்கள் விவாதித்தனர். தடுப்பூசி மருந்துகளை கொண்டு போய் சேர்க்கும் வசதிகள், குளிர்பதன சேமிப்பு வசதிகள், அதுதொடர்பான இதர கட்டமைப்பு வசதிகள் பற்றியும் ஆலோசனைகள் நடந்தன.

மேலும், சமன்நிலை அளவில் எல்லோருக்கும் இது கிடைக்க வேண்டும், இதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு, அதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

’கொரோனா தடுப்பு மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனிப்பாதை கூடாது’ மத்திய அரசு

தடுப்பூசி மருந்து எந்த அளவுக்குப் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறித்தும், அந்த நோக்கில் கண்காணிப்பது குறித்தும், வெளிப்படையான  தகவல் அளிப்பு மற்றும் விழிப்புணர்வு உருவாக்குதல் மூலம் சமுதாயப் பங்கேற்பை ஏற்படுத்துவதற்கான உத்திகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் நடைபெற்றன.

மருந்து கொள்முதலில் மாநிலங்கள் தனித்தனியான பாதைகளை வகுத்துக் கொள்ள வேண்டாம் என்று இந்தக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது