`இன்ஜினீயர் நல்லவர்; என் மீது அக்கறை கொண்டவர்!’- கல்லூரி மாணவி திடீர் பல்டி! நடந்தது என்ன?

 

`இன்ஜினீயர் நல்லவர்; என் மீது அக்கறை கொண்டவர்!’- கல்லூரி மாணவி திடீர் பல்டி! நடந்தது என்ன?

`இன்ஜினீயர் நல்லவர்; என் மீது அக்கறை கொண்டவர்!’- கல்லூரி மாணவி திடீர் பல்டி! நடந்தது என்ன?

காதல் வலையில் விழ வைத்த சென்னை மாநகராட்சி இன்ஜினீயருக்கு எதிராக புகார் கொடுத்த கல்லூரி மாணவி ஒருவர், “அவர் நல்லவர். என் மீது அக்கறை கொண்ட மனிதர். அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திடீரென பல்டி அடித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சி உதவி இன்ஜினீயர் ஒருவர், கொரோனா தடுப்பு பணிக்கு வந்த கல்லூரி மாணவியிடம் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் என பேசும் ஆடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவி, இன்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்ததடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமியை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.

அதில், “கொரோனா தொற்று காரணமாக நான் கல்லூரிக்குச் செல்லவில்லை. சென்னை மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த தன்னார்வ பெண் களப்பணியாளர் தேவை என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். பின்னர் அந்த வேலையில் சேர்ந்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறேன்.

இந்தப் பணிக்கு சென்னை மாநகராட்சியில் உதவி இன்ஜினீயராக இருக்கும் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நான் தினமும் விழிப்புணர்வு பணிக்கு வரும்போது எனது குடும்ப ஏழ்மை சூழ்நிலையை அறிந்த இன்ஜினீயர் என் மீது அக்கறைக் கொண்டு பேசுவார். பின்னர் அவர், என்னுடைய மேற்படிப்பதற்கு உதவி செய்வதாக செல்போனிலும் நேரிலும் கூறி வந்தார். அவர் ஒரு போதும் தவறான எண்ணத்தில் என்னிடம் பழகியதும் இல்லை. நானும் இன்ஜினீயரும் பேசிய செல்போன் உரையாடல்களை எனது அனுமதியின்றி எனக்கு தெரியாமல் யாரோ என் செல்போனிலிருந்து திருடி அதை பார்வேர்டு செய்து அதை எடிட்டிங் செய்து சித்தரித்து சமூகவலைதளங்களில் பரப்பிவிட்டுவிட்டனர்.
என் எதிர்கால வாழ்க்கையை கேவலப்படுத்தியதால் பொது மக்கள் மத்தியில் நடைபிணமாக வாழ்ந்து வருகிறேன். நான் சென்னை மாநகராட்சி அதிகாரியிடமும் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. எஸ்பிளனேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஜினீயர் மீது எந்தவித புகாரும் இதுவரை கொடுக்கவில்லை. எதிர்வரும் காலங்களில் ஒருபோதும் கொடுக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இன்ஜினீயரை பழிவாங்க யாரோ என்னை கேவலப்பத்தி பகடைக்காயாய் பயன்படுத்தி வருவதுதான் உண்மை.

`இன்ஜினீயர் நல்லவர்; என் மீது அக்கறை கொண்டவர்!’- கல்லூரி மாணவி திடீர் பல்டி! நடந்தது என்ன?

ஆகவே நான் இன்ஜினீயர் மீது எந்தவித வாய்மொழி, எழுத்து மூல புகாரையும் யாரிடமும் குறிப்பாக எஸ்பிளனேடு மகளிர் காவல் நிலையத்தில் கொடுக்கவில்லை. ஆனால் செல்போன் சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் என்னிடம் விசாரணை செய்தார். நான் நடந்த உண்மைகளை கூறி இன்ஜினீயர் நல்லவர், என் மீது அக்கறை கொண்ட மனிதர். எனக்கு படிப்பு சம்பந்தமான நல்ல ஆலோசனைகளையும் எதிர்கால வாழ்க்கை குறித்த ஆலோசனைகளையும் சொல்லி வழிகாட்டியாக இருப்பவர். என்னிடம் அவர் ஒரு போதும் தவறாக பழகியதில்லை. அவர் எனக்கு ஒரு நல்ல ஆண் நண்பராவார்.

விழிப்புணர்வு பணியில் உள்ள தொடர்பு மட்டுமே எங்களுக்குள் உண்டு. வேறு எந்தவித தவறான உறவும்கிடையாது. மேற்கூறியவற்றை எனது வாக்குமூலமாக ஏற்று எஸ்பிளனேடு மகளிர் காவல் நிலைய போலீஸாரோ அல்லது வேறு யாரும் இன்ஜினீயர் மீது பொய் வழக்கு போடாமலும் எனது எதிர்கால நலன்கருதி பாதுகாப்பு ஏற்படுத்தி தருமாறும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இந்த வாக்குமூலத்தை யாருடைய துன்புறுத்தலும் தூண்டுதலுமின்றி என் சுயநினைவுடன் சுயவிருப்பத்துடன் தங்களிடம் சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.