‘மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர்கள் நியமனம்’ – கமல்ஹாசன் அறிவிப்பு!

 

‘மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர்கள் நியமனம்’ – கமல்ஹாசன் அறிவிப்பு!

சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணியில் ஈடுபட, மாநில அளவிலான பொறுப்பாளர்களை நியமித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

‘மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர்கள் நியமனம்’ – கமல்ஹாசன் அறிவிப்பு!

அந்த அறிக்கையில், “வரவிருக்கின்ற தமிழக சட்டமன்றத் தேர்தலை பெரும் உத்வேகத்துடன் ‘வெற்றி’ என்ற ஒரே குறிக்கோளுடன் பேரெழுச்சியுடன் நமது கட்சி சந்திக்க உள்ளது. அதற்கு வலுசேர்க்கும் வகையில் கட்சியின் மாநில அளவிலான புதிய பொறுப்புகளை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நம் நிர்வாகிகள் தேர்தல் பணியினை திறம்பட செய்து நம் கட்சியின் வெற்றிக்கு உழைத்த நம்முடன் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நமது கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் கட்சி ரீதியான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

‘மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர்கள் நியமனம்’ – கமல்ஹாசன் அறிவிப்பு!

மாநில செயலாளர்கள்: பத்மப்ரியா (சுற்றுப்புற சூழல் அணி), வைத்தீஸ்வரன் (பொறியாளர் அணி), சையத் சைபுதீன் (ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு), வினோத் (ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு), அருணாச்சலம் (தலைமை நிலைய பரப்புரையாளர்), ரமேஷ் (தலைமை நிலைய தரவுகள் மற்றும் ஆய்வு), சதீஷ் (தலைமை நிலைய தரவுகள் மற்றும் ஆய்வு), சண்முகராஜன் (தரவுகள் மற்றும் ஆய்வு), சுந்தரம் (தரவுகள் மற்றும் ஆய்வு), பிரகாஷினி (தலைமை நிலைய அலுவலக நிர்வாகம்), ராஜேந்திரன் (மக்கள் தொடர்பாளர்)” குறிப்பிட்டுள்ளார்.