திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணை வற்புறுத்தியவர் அடித்துக் கொலை ! தெலுங்கானாவில் சோகம் !!

 

திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணை வற்புறுத்தியவர் அடித்துக் கொலை ! தெலுங்கானாவில் சோகம் !!

ஹைதராபாத்தின் மேடக் பகுதியில் உள்ள ராம்பூரில் கிராமவாசிகளால் இளைஞர் ஒருவர் எட்டு நபர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த நபர் ஒரு பெண்ணைத் தாக்கியதாகவும், அவரது திருமணத்தைத் தடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. அவரை கொல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் நாகராஜு என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இறந்தவர் நிஜாம்பூர் மண்டலில் வசிக்கும் நரசிம்ம கவுட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று கிராம வாசிகள் எட்டு பேரும் சேர்ந்து நரசிம்மனை வயல்வெளிக்கு அழைத்து சென்று பாறைகள் மற்றும் குச்சிகளைப் பயன்படுத்தி கடுமையாக தாக்கி உள்ளனர். பலத்த காயம் அடைந்ததால் நரசிம்ம சம்பவ இடத்திலேயே பலியானார். நரசிம்ம சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்ததை அடுத்து குற்றம் சாட்டப்பட்டவர் தப்பி ஓடிவிட்டார். காலை 6.30 மணியளவில், நரசிம்மரின் தந்தை ராஜராம் கவுட் தனது மகன் வயலில் இறந்து கிடப்பதை கண்டு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளுமாறு பெண்ணை வற்புறுத்தியவர் அடித்துக் கொலை ! தெலுங்கானாவில் சோகம் !!

விசாரணையில் நரசிம்ம மற்றும் நாகராஜுவின் குடும்பங்களுக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. நாகராஜுவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை நரசிம்ம பின்தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அந்த பெண் 19 வயது சிறுமியாக இருந்தபோது அ வரை துன்புறுத்தியதாக நரசிம்ம மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்த பெண்ணுக்கு 20 வயது ஆன நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இரு குடும்பங்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் நாகராஜு மற்றும் அவரது கூட்டாளிகள் நரசிம்மரைத் தாக்கியதில் அவர் பலியானார். இதையடுத்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர் மற்றும் சம்பவம் தொடர்பாக ஒரு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.