“பசும்பொன் நிகழ்வுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்” – பொன்.ராதாகிருஷ்ணன்

 

“பசும்பொன் நிகழ்வுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்” – பொன்.ராதாகிருஷ்ணன்

தேவர் ஜெயந்தி விழாவில், தனக்கு வழக்கப்பட்ட விபூதியை திமுக தலைவர் ஸ்டாலின் கீழே கொட்டியது அதிர்ச்சி அளிப்பதாகவும், இந்த சம்பவத்திற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

“பசும்பொன் நிகழ்வுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்” – பொன்.ராதாகிருஷ்ணன்

மதுரையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு, ஆளுநர் ஒப்புதல் வழங்கியதற்கு பாராட்டு தெரிவித்த அவர்,
முஸ்லிம்களின் கருப்பு நாளாக கருதும் டிசம்பர் 6ஆம் தேதி பாஜகவுக்கு புனிதநாள் என்றும், அன்றைய தினம் அம்பேத்கர் பிறந்த நாள் என்பதாலேயே வேல் யாத்திரையை முடிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கும் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணன்,2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றிபெற்று, ஆட்சியில் பங்கு பெறும்
என தெரிவித்தார்.

“பசும்பொன் நிகழ்வுக்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்” – பொன்.ராதாகிருஷ்ணன்