“நிவாரண உதவிகள் வழங்க ஸ்டாலின் அழுத்தம் கொடுக்கிறார்”-கட்சி நிர்வாகி பேச்சு

 

“நிவாரண உதவிகள் வழங்க ஸ்டாலின் அழுத்தம் கொடுக்கிறார்”-கட்சி நிர்வாகி பேச்சு

திருப்பத்தூ

நிவர் புயல் நிவாரண உதவிகளை துரிதப்படுத்த வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் அழுத்தம் கொடுப்பதாக, அக்கட்சி நிர்வாகி வேதனை தெரிவித்துள்ளனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, திருப்பத்தூரில் உள்ள மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில், அக்கட்சியினர் உணவு மற்றும் நலதிட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பேசிய திருப்பத்தூர் நகர செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன், தமிழகம் முழுவதும் தற்போது நிவர் புயல் காரணமாக மக்களை திமுக தலைவர் ஸ்டாலின், நேரடியாகச் சென்று நல நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறி வருவதாகவும், ஸ்டாலின் உத்தரவின் படி, கட்சித் தொண்டர்கள் பல்வேறு உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார்.

“நிவாரண உதவிகள் வழங்க ஸ்டாலின் அழுத்தம் கொடுக்கிறார்”-கட்சி நிர்வாகி பேச்சு

இதன் அடிப்படையில், வேலூர் மேற்கு மாவட்ட இளைஞரணியினர் தங்களால் இயன்ற உதவிகளையும், மீட்பு பணிகளையும் செய்து வருவதாக கூறிய ராஜேந்திரன், ஸ்டாலின் தொடர்ந்து நிவாரண உதவிகளை அதிகளவில் துரிதப்படுத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஒவ்வொரு குடும்பங்களின் சூழ்நிலையும் கடனால் தள்ளப்பட்டு நெருக்கடியில் வாழ்ந்து வருவதாகவும் கூறினார். எனினும் மக்கள் தத்தளிக்கும் காலங்களில் ஆளுங்கட்சியாக, இல்லையென்றாலும், மக்களின் பிரச்சனைகளை முன்னெடுத்து செல்வதாக அவர் பேசினார்.