“தோல்வி பயத்தால் ஸ்டாலின் பொய்களை கூறி வருகிறார்”- அமைச்சர் வேலுமணி

 

“தோல்வி பயத்தால் ஸ்டாலின் பொய்களை கூறி வருகிறார்”- அமைச்சர் வேலுமணி

கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற ஆயுதபூஜை விழாவில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு ஆயுதபூஜையை கொண்டாடினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை அறிந்து பூர்த்தி செய்தவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றும், கரிகால சோழன் காலத்தில் இருந்த குடிமராமத்து திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து, தற்போதைய கரிகால சோழன் ஆக அவர் திகழ்வதாகவும் தெரிவித்தார்.

“தோல்வி பயத்தால் ஸ்டாலின் பொய்களை கூறி வருகிறார்”- அமைச்சர் வேலுமணி

மேலும், அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதால், தோல்வி பயம் காரணமாக ஸ்டாலின் பொய்களை வாரி தூற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் தன்னுயிரை துச்சமென மதித்து மக்களுடைய உயிர் முக்கியம் என்று மாவட்டந்தோறும் சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வுசெய்து வருவதாகவும், எந்த சூழ்நிலையிலும் மக்களுக்காக இயங்கிக்கொண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“தோல்வி பயத்தால் ஸ்டாலின் பொய்களை கூறி வருகிறார்”- அமைச்சர் வேலுமணி