“வேல் யாத்திரையை கண்டு ஸ்டாலினுக்கு அச்சம்” – எல்.முருகன் பேட்டி

 

“வேல் யாத்திரையை கண்டு ஸ்டாலினுக்கு அச்சம்” – எல்.முருகன் பேட்டி

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை நிகழ்ச்சியையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

“வேல் யாத்திரையை கண்டு ஸ்டாலினுக்கு அச்சம்” – எல்.முருகன் பேட்டி

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை அமல்படுத்து பாஜகவும், கோரிக்கை வைத்த நிலையில், அந்த சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், இதற்காக ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் நன்றியை தெரிவித்து கொள்வதாகவும் கூறினார்.

“வேல் யாத்திரையை கண்டு ஸ்டாலினுக்கு அச்சம்” – எல்.முருகன் பேட்டி

வேல் யாத்திரையை கண்டு ஸ்டாலினால் தூங்க முடியவில்லை என்று கூறிய முருகன், ஸ்டாலினுடைய ஆட்சிக்கனவை கலைத்துவிடுமோ? என பயந்து நேரடியாக பதில் கூறாமல், அவர் பின்னால் உள்ளவர்கள் மூலம் கருத்து கூறி வருவதாக முருகன் தெரிவித்தார். மேலும், உறுதியாக வேல் யாத்திரை நடத்தியே தீருவோம் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

“வேல் யாத்திரையை கண்டு ஸ்டாலினுக்கு அச்சம்” – எல்.முருகன் பேட்டி
“வேல் யாத்திரையை கண்டு ஸ்டாலினுக்கு அச்சம்” – எல்.முருகன் பேட்டி