எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்

 

எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் திமுக 159 தொகுதிகளுடன் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் தனி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கிறது. அதேசமயம் 75 தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை பெற்றாலும் திமுகவிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் வரும் 7 ஆம் தேதி மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த சூழலில் மு.க.ஸ்டாலினனுக்கு எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்த ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ” மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை!ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம். அத்தகைய ஜனநாயகம் காப்போம்!” என்று கூறியுள்ளார்.