இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் எஸ்.எஸ்.ஐ பலி!

 

இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் எஸ்.எஸ்.ஐ பலி!

கிருஷ்ணகிரி

ஒசூர் அடுத்த தளியில் சாலையோர பள்ளத்தில் இருசக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்தவர் சிவாஜி(58). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இதற்காக, ஓசூரில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து சிவாஜி தளியில் இருந்து ஓசூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் எஸ்.எஸ்.ஐ பலி!

தளி அடுத்த தொட்ட உப்பனூர் பேருந்து நிறுத்தம் அருகே வளைவில் சென்றபோது எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் சிவாஜிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல் சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, தளி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் சொந்த ஊரான காரிமங்கலத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இந்த விபத்து, குறித்து தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.