ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊரணியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

 

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊரணியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

விருதுநகர்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊரணியில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கிருஷ்ணன்கோவில் போக்குவரத்து நகரை சேர்ந்தவர் பாண்டிசெல்வம். இவரது மகன் ஜெயப்பாண்டி (10). அதே பகுதியை சேர்ந்த ஜான்சன் அந்தோணி மகன் ஜீவின்பால் (7). இவர்கள் நேற்று கல்குளம் அருகேயுள்ள ஊரணி பகுதியில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, சிறுவர்களின் செருப்பு ஊரணிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. அதனை எடுக்க ஜெயபாண்டியும், ஜீவின் பாலும் ஊரணிக்குள் இறங்கினர். அப்போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் சிக்கிக்கொண்ட இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர்.

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊரணியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

இதனை கண்ட அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் கூச்சலிட்டு அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். இதனால் அந்த பகுதி மக்கள் ஊரணிக்குள் குதித்து இருவரையும் மீட்டு, ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். அங்கு சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த கிருஷ்ணன் கோயில் போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.