ஶ்ரீரங்கத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

 

ஶ்ரீரங்கத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

திருச்சி

சட்டமன்ற தேர்தலில், திருச்சி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, ஶ்ரீரங்கத்தில இன்று வாக்களார் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதனையொட்டி, ஶ்ரீரங்கம் சாவடி பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா கலந்துகொண்டு, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில், பெண்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

ஶ்ரீரங்கத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

தொடர்ந்து, அம்மா மண்டபம் பகுதியில் சென்று நிறைவடைந்தது. இந்த பேரணியின்போது, சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து துண்டு பிரசுரங்கள், விழிப்புணர்வு வாசகம் அடங்கிய டீசர்ட் மற்றும் சுவரொட்டிகளையும் விநியோகம் செய்யப்பட்டது.