ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்- முதல்நாளில் நீள்முடி கிரீடத்தில் நம்பெருமாள் புறப்பாடு

 

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்- முதல்நாளில் நீள்முடி கிரீடத்தில் நம்பெருமாள் புறப்பாடு

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா துவங்கியதை அடுத்து, முதல்நாளான இன்று நம்பெருமாள் நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தம் அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று பக்தர்களால் அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா, நேற்றிரவு திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்- முதல்நாளில் நீள்முடி கிரீடத்தில் நம்பெருமாள் புறப்பாடு

தொடர்ந்து, பகல்பத்து நிகழ்வின் முதல் நாளான இன்று காலை நம்பெருமாள் தங்கப்பல்லக்கில் மூலஸ்தானத்தில் இருந்து நீள்முடி கிரீடம், ரத்தின அபயகஸ்தரம், பவளமாலை, திருமார்பில் லட்சுமி பதக்கம், சூர்யபதக்கம் மற்றும் முத்து மாலை உள்ளிட்ட திருவாபரணங்களை சூடிய படி ஆழ்வார்கள் புடைசூழ புறப்பட்டு, அர்ச்சுன மண்டபம் சென்றடைந்தார். அங்கு எழுந்தருளிய நம்பெருமாள் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதித்தருளுவார்.

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்- முதல்நாளில் நீள்முடி கிரீடத்தில் நம்பெருமாள் புறப்பாடு

மாலை அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார். உற்சவத்தின்போது ஸ்ரீபாதம் தாங்கிகள் மற்றும் ஸ்ரீவைஷ்ணவ கோஷ்டியினர் மட்டுமே பங்கேற்றிருந்தனர். பகல்பத்து வைபவத்தின் 10ஆம் நாளான டிசம்பர் 24ஆம் தேதி மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளிப்பார். பின்னர் இராப்பத்து வைபத்தின் முதல் நாளான 25ஆம் தேதியன்று அதிகாலை பரமபதவாசல் திறப்பு எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். வைகுண்ட ஏகாதெசி திருவிழாவின் 21 நாட்களும் மூலவர் பெருமாள் முத்தங்கியுடன் சேவை சாதித்தருளுவார்

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா துவக்கம்- முதல்நாளில் நீள்முடி கிரீடத்தில் நம்பெருமாள் புறப்பாடு

நடப்பாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நம்பெருமாள் புறப்பாட்டின்போது, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனினும் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நம்பெருமாளை காலை 8 மணிமுதல் இரவு 8 மணிவரை பக்தர்கள் தரிசித்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டு, பக்தர்கள் வரிசையில் நின்று தரிசித்து வருகின்றனர்.