செல்வச் செழிப்பைத் தரும் ஶ்ரீனிவாச மந்திரம்!
Feb 15, 2021, 19:25 IST1613397347000
ஶ்ரீனிவாச பெருமாளுக்கு உகந்த காயத்ரி மந்திரத்தை பாராயணம் செய்து தினமும் 108 முறை ஜெபித்து வந்தால் சகல செல்வத்தையும் பெறலாம்.
மந்திரம்:
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
விளக்கம்:
பெருமாளே எனக்கு சிறப்பான அறிவை தந்து என் உள்ளத்தில் உள்ள இருளை நீக்கி என் மனதைத் தெளிவு படுத்த வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன். ஶ்ரீனிவாசன் நம்மைக் காத்து அருள்புரிவார்!
இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் 16 விதமான பேறுகளைப் பெறலாம். மரண பயம் நம்மை விட்டு நீங்கும். செல்வச் செழிப்பு ஏற்படும்.