மீண்டும் தமிழக மீனவர்கள் ஏழு பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

 

மீண்டும் தமிழக மீனவர்கள் ஏழு பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். கச்சத்தீவுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 விசைப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவர்களை கைது செய்தனர்.

மீண்டும் தமிழக மீனவர்கள் ஏழு பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

இந்நிலையில் மேலும் 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து TN 12 MM 204என்ற விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 7 மீனவர்களை புத்தளம் மாவட்ட கல்ப்பிட்டி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கைது செய்து கல்பிட்டி கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படகு உரிமையாளர் தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளத்தை சேர்ந்த அந்தோணி மிக்கேல் செளந்திரராஜ் என்பவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட படகினை அதே பகுதியை சேர்ந்த வேல்ராஜ் என்பவர் வாங்கி கடல் தொழிலுக்கு சென்று வருகிறார். இப்படகில் வாலிநோக்கத்தை சேர்ந்த ஈஸ்வரன் மற்றும் நரிப்பையூரை சேர்ந்த பரமசிவம் உள்ளிட்ட நால்வர் சென்றுள்ளனர்