திருமண பாக்கியம் அருளும் ஆண்டாள் ஸ்லோகம்!

 

திருமண பாக்கியம் அருளும் ஆண்டாள் ஸ்லோகம்!

ஆண்டாள் நாச்சியார் பூமாதேவியின் அவதாரமாக பார்க்கப்படுகிறார். 12 ஆழ்வார்களில் ஒரே பெண் இவர்தான். மிகச்சிறந்த பெருமாள் பக்தை. தோட்டத்தில் பச்சிளம் குழந்தையாக பெரியாழ்வாரால் கண்டுபிடிக்கப்பட்டவர் ஆண்டாள். மிகச்சிறந்த விஷ்ணு பக்தையாக வளர்ந்தார். திருப்பாவையைத் தந்தது ஆண்டாள்.

திருமணத்துக்குக் காத்திருக்கும் பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற ஆண்டாளை நினைத்து ஆண்டாள் ஸ்லோகத்தைத் தினமும் சொல்லி வர வேண்டும். தினமும் காலையில் குளித்து இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால் தடைகள் அனைத்தையும் விலக்கி நல்ல, அழகான கணவர் கிடைக்க ஆண்டாள் அருள் புரிவார்.

திருமண பாக்கியம் அருளும் ஆண்டாள் ஸ்லோகம்!

ஸ்லோகம்:

அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்

அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:

தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா

தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:

கோதா ஸ்துதி

விளக்கம்:

சாஸ்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்களின் கணவரான திருவரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களைப் பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உம்மை வணங்குகிறோம்!

இந்த மந்திரத்தைத் தினமும் சொல்ல முடியாதவர்கள் வாரத்துக்கு இரண்டு நாள் புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வரலாம். தினமும் காலையில் சூரிய உதயத்துக்கு 45 நிமிடம் முதல் முதல் ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக இந்த மந்திரத்தை சொல்லிவிட வேண்டும். 9, 11, 33 அல்லது 108 முறை சொல்ல வேண்டும். சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் அல்லது பால் இனிப்புகளை நைவேத்தியமாகப் படைக்கலாம்.

திருமணத்துக்கு காத்திருக்கும் பெண்கள் மட்டும்தான் சொல்ல வேண்டும் என்று இல்லை. எந்த வயதினரும், எந்த பாலினத்தவரும் இதைச் சொல்லலாம். இந்த மந்திரத்தை சொல்வதன் மூலம் மனம் சுத்தமாகும், நல்ல ஆளுமைத் திறன்கள் கிடைக்கப் பெறும். திருமணம் முடிவான பிறகு, எந்த தடையும் பிரச்னையும் இன்றி திருமணம் சுமூகமாக நடைபெற இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்.

திருமணத்துக்கு காத்திருக்கும் ஆண்களும் கூட இதைச் சொல்லலாம். நல்ல அழகான மனைவி அவர்களுக்கு விரைவில் கிடைப்பார்கள்.