கோபத்தைக் குறைக்கும் மஹேஸ்வரி காயத்ரி மந்திரம்!
Feb 16, 2021, 15:19 IST1613468981000
சப்த கன்னியரில் ஒருவரும் சிவபெருமானின் அம்சமாகவும் தோன்றியவர் ஶ்ரீமஹேஸ்வரி. இவர் அம்பிகையின் தோளிலிருந்து உருவானவர். இவரை வழிபட்டு வந்தால் நம்முடைய கோபத்தைக் குறைத்து, மன அமைதியைத் தருவார். மேலும் நம்முடைய உடலில் பித்தத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமை மஹேஸ்வரிக்கு உண்டு.
வடகிழக்கு எனப்படும் ஈசானியத்தை இவர்தான் நிர்வகிக்கின்றார். இவரது வாகனம் ரிஷபம். சிவ பெருமான் நிகழ்த்தும் அனைத்து சம்ஹாரங்களும் மஹேஸ்வரியின் சக்தியால்தான் செய்கிறார்.
மந்திரம்:
ஓம் ச்வேத வர்ணாயை வித்மஹே!
சூல ஹஸ்தாயை தீமஹி!
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்.
இந்த காயத்ரி மந்திரத்தை வடகிழக்கு திசையை நோக்கி அமர்ந்து 108 முறை சொல்லி வந்தால், மனதில் உள்ள கோபம் மறைந்து அமைதி உருவாகும்.