கல்யாணமான காதலன் -கண்டுபிடித்த காதலி -அடுத்து காதலிக்கு நடந்த விபரீதம்

 

கல்யாணமான காதலன் -கண்டுபிடித்த காதலி -அடுத்து காதலிக்கு நடந்த விபரீதம்


தன்னுடைய காதலி தன்னை விட்டு விலகியதால் கோவப்பட்ட காதலன் அவரின் முகத்தில் ஆசிடை வீசிய கொடுமை நடந்துள்ளது

கல்யாணமான காதலன் -கண்டுபிடித்த காதலி -அடுத்து காதலிக்கு நடந்த விபரீதம்


குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் ராணிப்பில் வசிக்கும் 39 வயதான ஹிதேஷ் சோலங்கிக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர் .இந்நிலையில் அவருக்கு காலிகம் பகுதியில் வசிக்கும் 33 வயதான பெண்ணோடு காதல் ஏற்பட்டது .அந்த பெண்ணை அவர் அங்குள்ள நூலகத்தில் சந்தித்து காதலித்து வந்தார் .அப்போது அவர் அந்த பெண்ணிடம் தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையென்று கூறியுள்ளார் .அதை உண்மையென்று நம்பிய அந்த பெண் அவரை காதலிக்க ஆரம்பித்தார் .அதன் பிறகு ஹிதேஷ் அந்த பெண்ணிடம் அவரின் வீட்டில் அவர்களின் காதலை ஏற்கமாட்டார்கள் என்று கூறி அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒரு தனி வீட்டில் குடிவைத்தார் .
பின்னர் நாளடைவில் அந்த பெண்ணுக்கு தன்னுடைய காதலன் ஹிதேஷுக்கு ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகள் இருக்கும் விவரம் தெரிய வந்தது .அதனால் அந்த பெண் ஹிதேஷை விட்டு விலகினார் .அதை பொறுத்துக்கொள்ள முடியாத ஹிதேஷ் கடந்த வாரம் அந்த பெண் தனியாக சென்றபோது அவரின் முகத்திலும் கைகளிலும் ஆசிடை வீசியுள்ளார் .இந்த ஆசிட் தாக்குதலில் அந்த பெண் கடுமையான காயம் ஏற்பட்டு ,அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்ச்சையளிக்கப்பட்டு வருகிறது .இந்த ஆசிட் தாக்குதல் பற்றி போலிசுக்கு தகவல் தெரிந்து அந்த ஹிதேஷை கைது செய்தனர் .

கல்யாணமான காதலன் -கண்டுபிடித்த காதலி -அடுத்து காதலிக்கு நடந்த விபரீதம்