குலதெய்வ வழிபாட்டில் இந்த பொருளை வைத்து வழிபடுங்கள்!

 

குலதெய்வ வழிபாட்டில் இந்த பொருளை வைத்து வழிபடுங்கள்!

குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் முக்கியமான வழிபாடு. உங்களை உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். வீட்டில் எப்போதும் பிரச்சனை, ஒரு பிரச்சனை முடிந்ததும் மற்றொரு பிரச்சினை தலை தூக்குகிறது, நிம்மதி இல்லை ,பணக்கஷ்டம், மனக்கஷ்டம் என எதுவாக இருந்தாலும் உங்களுக்கு முதலில் ஞாபகம் வர வேண்டியது உங்கள் குல தெய்வம்தான். குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் முறையாக பின்பற்றாமல் இருக்கிறார்களோ ,அவர் வீட்டிலேயே இத்தனை கஷ்டங்களும் தாண்டவமாடும்.

குலதெய்வ வழிபாட்டில் இந்த பொருளை வைத்து வழிபடுங்கள்!

குறிப்பாக வீட்டின் நிலவாயில் மற்றும் பூஜை அறையில் இருக்கும் கண்ணாடியில் குலதெய்வம் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் நிலவாயிலில் அகல் தீபம் ஏற்றி வைப்பது முக்கியம். ஒரு அகலில் நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்றி வர வேண்டும். இப்படி நீங்கள் செய்து வரும் பட்சத்தில் உங்களுக்கு சகல வளங்களும் கிடைக்கும்.

குலதெய்வ வழிபாட்டில் இந்த பொருளை வைத்து வழிபடுங்கள்!

அதேபோல் குலதெய்வ வழிப்பாட்டில் மிக முக்கியமான ஒன்று என்றால் அது எலுமிச்சை பழம். எலுமிச்சை பழத்தை வைத்து உங்கள் குலதெய்வம் மந்திரத்தை உச்சரித்து நீங்கள் வழிபட்டு வந்தால் உங்கள் சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்து போய்விடும். சிலருக்கு குல தெய்வம் என்றால் எதுவென்றே தெரியாமல் இருப்பார்கள். அப்படி குலதெய்வம் தெரியாமல் இருப்பவர்கள் திருச்செந்தூர் முருகன் மற்றும் காமாட்சியம்மனை வழிபடலாம்.

குலதெய்வ வழிபாட்டில் இந்த பொருளை வைத்து வழிபடுங்கள்!

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் உங்கள் குலதெய்வத்தை நினைத்து நீங்கள் நில வாசலில் பூஜை செய்து, பூஜை அறையில் எலுமிச்சை பழத்தை வைத்து மந்திரம் சொல்லி வாருங்கள். குலதெய்வ சாப நிவர்த்தி செய்யக் கூடிய சக்தி இந்த எளிய பரிகாரத்திற்கு உண்டு. இப்படி நீங்கள் செய்து வரும் பட்சத்தில் குலதெய்வ சாபம் நீங்கி உங்களுடைய அனைத்து துன்பங்களும் விலகி விடும்.