இன்று இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி!
Jan 25, 2025, 10:01 IST1737779494108

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி கொல்கத்தாவில் கடந்த 22ம் தேதி நடைபெற்றது. முதலாவதாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியாக அந்த அணி 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பட்லர் 68 ரன்கள் எடுத்தார். 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 12.5 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்ற உத்வேகத்துடன் இன்றைய போட்டியிலும் வெற்றி பெற இந்திய அணி முனைப்பு காட்டும். அதேவேளையில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணி இன்றைய போட்டியில் இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.