காமன்வெல்த் நீச்சல் போட்டி - இந்திய வீரர் ஸ்ரீஹரி நடராஜ் இறுதி சுற்றுக்கு தகுதி

 
Srihari

காமன்வெல்த் நீச்சல் போட்டியில் இந்திய நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

இதில் நேற்று நடைபெற்ற நீச்சல் போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ், ஆண்கள் 100 மீட்டர் பேக்-ஸ்ட்ரோக் பிரிவு நீச்சல் போட்டியில்,  54.68 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து மூன்றாம் இடம்பிடித்தார். இதன்மூலம், அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.இதனை தொடந்து நடைபெற்ற அரையிறுதி போட்டியில், இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.   அரையிறுதி ஆண்கள் 100 மீட்டர் பேக்-ஸ்ட்ரோக் பிரிவு நீச்சல் போட்டியில், அவர் 54.55 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 7வது இடம்பிடித்தார். இதனால் அவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். இறுதிப்போட்டி நாளை நடைபெறுகிறது.