காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்

 
Sanket Sargar

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. 72 நாடுகளில் இருந்து 5000 விளையாட்டு வீரர்கள் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.  இந்தியாவிலிருந்து மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. பளுதூக்கும் போட்டியில் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார். 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கேத் மகாதேவ் சர்கார் 248 கிலோ எடை தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.