விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தூண்டி கருப்பசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

 

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தூண்டி கருப்பசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

கொரோனா தொற்று பாதித்ததால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர நலம் பெற வேண்டி வளநாடு அருகே கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தூண்டி கருப்பசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

திருச்சி மாவட்டம் மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் வளநாடு அருகே உள்ள மிகவும் சக்தி வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தூண்டி கருப்பசாமி கோவிலில் சிறப்பு அர்ச்சனை ஒன்றிய கழக செயலாளர் சக்தி பெருமாள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தூண்டி கருப்பசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு

பூஜையின்போது விஜயகாந்த் பூரண நலம் பெற்று வந்தவுடன் வேல் செய்து கொண்டு வந்து வைக்கப் படும் என்று வேண்டிக்கொண்டனர்.

மாவட்ட தொண்டர் அணி துணை செயலாளர் சாமிக்கண்ணு, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் பொண்ணடைக்கன், ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் பழனியாண்டி, மற்றும் ஒன்றிய ஊராட்சி நிர்வாகிகள் தங்கராஜ், கண்ணுச்சாமி, புஷ்பராஜ், நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டனர்.