தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை சிறப்பு ரயில்களின் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை  சிறப்பு ரயில்களின் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கானது ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால்  அனைத்து விரைவு, பயணிகள் மற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே அறிவித்திருந்தது. இருப்பினும், குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை  சிறப்பு ரயில்களின் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இந்நிலையில் தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை  சிறப்பு ரயில்களின் சேவை ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அந்த வகையில் திருச்சி – செங்கல்பட்டு (விருத்தாசலம்), திருச்சி – செங்கல்பட்டு (மயிலாடுதுறை), மதுரை – விழுப்புரம், கோவை – காட்பாடி, அரக்கோணம் – கோவை, திருச்சி – நாகர்கோவில், கோவை – மயிலாடுதுறை ஆகிய தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.