ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்! பட்டியல், அட்டவணை வெளியீடு

 

ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்! பட்டியல், அட்டவணை வெளியீடு

கொரோனா ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தற்போது 01.6.2020 முதல் தமிழகத்தில் ரயில் போக்குவரத்தை துவக்குவதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் புறப்படும் ரயில் நிலையங்கள் நின்று செல்லும் ரயில் நிலையங்கள் சென்று சேரும் ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் பயணச்சீட்டு பதிவு செய்வதற்காக குறைந்த அளவு சாளரங்கள் திறந்து வைக்கப்பட்டிருக்கும். குறைந்த அளவு பயணச்சீட்டு பதிவு சாளரங்களே திறந்திருப்பதால் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டுகளை தற்போது ரத்து செய்ய இயலாது. இதற்கான வசதி பின்னர் ஏற்படுத்தப்பட இருக்கிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு சனிக்கிழமை (30.5.2020) மாலை 4 மணி முதல் துவங்குகிறது. கொரோனா தொற்று இருப்பதால் பயணச்சீட்டுகளை முடிந்த அளவு இணையதளத்திலேயே பயணிகள் பதிவு செய்யுமாறு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.

மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், காட்பாடி – கோயம்புத்தூர், கோயம்புத்தூர் – மயிலாடுதுறை மார்க்கங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. 01.6.2020 முதல் மதுரை பகுதியில் இயக்கப்படும் ரயில்களின் கால அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்களின் கால அட்டவணை

1. வண்டி எண் 02636 மதுரை – விழுப்புரம் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 02635 விழுப்புரம் – மதுரை சிறப்பு ரயில் விழுப்புரத்திலிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 09.20 மணிக்கு மதுரை வந்து சேரும்.இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, அரியலூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 4 குளிர்சாதன வசதி இருக்கை பெட்டிகள், 13 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மின்மோட்டார் பெட்டிகள் இணைக்கப்படும்.

ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்! பட்டியல், அட்டவணை வெளியீடு

2. வண்டி எண் 02627 திருச்சி – நாகர்கோவில் சிறப்பு ரயில் திருச்சியிலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு பின்பு மதுரையிலிருந்து காலை 08.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 01.00 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 02628 நாகர்கோயில் – திருச்சி சிறப்பு ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு பின்பு மதுரையிலிருந்து இரவு 07.25 மணிக்கு புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு திருச்சி சென்று சேரும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இருக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள், 8 பொது பெட்டிகள், 2 சரக்கு மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகள் இணைக்கப்படும்.