பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில் – நாளை முன்பதிவு ஆரம்பம்!

 

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில் – நாளை முன்பதிவு ஆரம்பம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில் – நாளை முன்பதிவு ஆரம்பம்!

கொரோனா பேரிடர் காலத்தில் முற்றிலுமாக முடக்கப்பட்ட ரயில் சேவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மீண்டும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இதனால் மக்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியாக சென்று பண்டிகையை கொண்டாடினர்.

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில் – நாளை முன்பதிவு ஆரம்பம்!

இந்நிலையில் ஜனவரி 12, 13 ஆம் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.ஜனவரி 16, 17 ஆம் தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்கு நாகர்கோவிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு சென்னையில் இருந்து கோவைக்கு பொங்கல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி இரவு 8 மணிக்கு கோவையிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பொங்கல் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.