ஓபிஎஸ் சகோதரர் கொரோனாவிலிருந்து பூரணமடைய வேண்டி 501 தேங்காய் உடைத்து வழிபாடு!

 

ஓபிஎஸ் சகோதரர் கொரோனாவிலிருந்து பூரணமடைய வேண்டி 501 தேங்காய் உடைத்து வழிபாடு!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் சகோதரர் ராஜா மற்றும் பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் பூர்ண குணமடைய வேண்டி அதிமுக நிர்வாகிகள் 501 தேங்காயை உடைத்து அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தனர்.

கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலய வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரரும் தேனி மாவட்ட ஆவின் குழுத்தலைவர் ஓ. ராஜா மற்றும் பரமக்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன் ஆகியோர் முழு உடல் ஆரோக்கியத்துடன் பூரண குணமடைய வேண்டி 501 தேங்காயை உடைக்கப்பட்டது.

ஓபிஎஸ் சகோதரர் கொரோனாவிலிருந்து பூரணமடைய வேண்டி 501 தேங்காய் உடைத்து வழிபாடு!

தொடர்ந்து முத்துராமலிங்கத் தேவரின் உருவப்படத்திற்கு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக இளைஞரணி துணைச் செயலாளர் சின்னான்டு தலைமையின் அதிமுகவினர் மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து அங்குள்ள தேவர் சிலைக்கு பால் அபிஷேகங்கள் செய்து பிரார்த்தனையில் ஈடுபட்டனர்