மஸ்கட்டில் இருந்து 132 இந்தியர்களுடன் பீகார் திரும்பிய சிறப்பு விமானம்

 

மஸ்கட்டில் இருந்து 132 இந்தியர்களுடன் பீகார் திரும்பிய சிறப்பு விமானம்

கயா: மஸ்கட்டில் சிக்கித் தவித்த 132 இந்தியர்களை அழைத்துக் கொண்டு சிறப்பு விமானம் பீகாரை வந்தடைந்தது.

மஸ்கட்டில் இருந்து சிக்கித் தவித்த 132 இந்தியர்களை அழைத்துக் கொண்டு கிளம்பிய சிறப்பு விமானம் பீகாரில் உள்ள கயா விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பயணிகள் யாருக்கும் கொரோனா வைரஸின் அறிகுறிகள் தென்படவில்லை.

மஸ்கட்டில் இருந்து 132 இந்தியர்களுடன் பீகார் திரும்பிய சிறப்பு விமானம்

மஸ்கட்டில் இருந்து திரும்பி வந்த 132 பேரில் 116 பேர் பீகாரைச் சேர்ந்தவர்கள், 16 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கயா விமான நிலைய இயக்குநர் திலீப் குமார் தெரிவித்தார். இந்த பயணிகளில் பீகாரில் வசிப்பவர்கள் போத் கயாவில் உள்ள பல்வேறு ஹோட்டல்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.