இல்லறம் இனிக்கச் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!
குடும்ப வாழ்வு இனிமையாக இருக்கக் கணவன் – மனைவி இடையே உறவு மகிழ்ச்சியாகவும், பிரச்னை இன்றியும் இருக்க வேண்டும். இருவருக்கு இடையே சலிப்பு, கோபம், வெறுப்பு, ஏக்கம் போன்றவை இருக்கக் கூடாது. என்னதான் அன்பு காட்டினாலும் கணவன் / மனைவி நம் மீது அன்பு காட்டவில்லையே என்று வருந்துபவர்கள்தான் இன்று அதிகம். அப்படிப்பட்டவர்கள் கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி வருவதன் மூலம் இல்வாழ்க்கை மகிழ்ச்சியானதாக மாறும்.
மனைவி சொல்ல வேண்டிய மந்திரம் 1:
ஓம் கம் கம் க்யாம் க்யஹ மம
பத்னி வஷ்யம் குரு குரு ஸ்வாஹா ||
கணவன் சொல்ல வேண்டிய மந்திரம்:
ஓம் கம் கம் க்யாம் க்யஹ மம
பதி வஷ்யம் குரு குரு ஸ்வாஹா ||
வீட்டில் காலையில் வடக்கு நோக்கி அமர்ந்து அல்லது நின்று 27 முறை இந்த மந்திரத்தைச் சொல்லி வருவதன் மூலம் கணவன் – மனைவி இடையே அன்பு அதிகரிக்கும்.
மனைவி சொல்ல வேண்டிய மந்திரம் 2:
ஓம் ஹும் ஜும் ஸஹ அர்த்தநாரிஸ்வர
ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா
பெண்கள் மாதவிலக்கு நாட்கள் தவிர்த்து 41 நாட்களுக்குத் தொடர்ந்து இந்த மந்திரத்தைத் தினமும் 108 முறை சொல்ல வேண்டும். அப்படிச் செய்தால் கணவன் மனைவி இடையே அன்பு, ஒற்றுமை, அன்னியோன்னியம் அதிகரிக்கும்.